காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளின் அருகே அனுமதியின்றி பார்கள் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சந்தோஷ் ஹதிமானிக்கு அதிக அளவில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் மதுவிலக்கு போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். இந்த உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் போலீசார் காஞ்சிபுரம் பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் செயல்படும் மதுபானக் கூடங்களை கண்டறிந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.