திருப்போரூர்: திருப்போரூரில் தனியார் நகைக்கடன் நிறுவனத்தில் திடீரென அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்போரூர் மேற்கு மாடவீதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முத்தூட் நகைக்கடன் நிறுவனம் உள்ளது. இங்கு தினமும் காலை 9 மணிக்கு திறந்து மாலை 6 மணி வரை நகைக்கடன் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் நான்கு பணியாளர்கள் பணி புரிகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் இந்த நகைக்கடன் நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்தது. இதனால் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.