திருப்போரூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து வகையான பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து திருப்போரூர் பேரூராட்சி சார்பில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து துண்டு பிரசுரம், வீதி நாடகம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக பல்வேறு கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்களில் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து நேற்று திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தலைமையில் ஊழியர்கள் நேற்று திருப்போரூர் பேருந்து நிலையம், பழைய மாமல்லபுரம் சாலை, ரவுண்டானா, பஜார் வீதி, இள்ளலூர் சந்திப்பு ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.