மதுராந்தகத்தில் குடிநீர் முறையாக வழங்காததை கண்டித்து பொதுமக்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட, 24 வார்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த வார்டுகளில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை நாள்தோறும் குடிநீர் வினியோகப்பட்டது. கடந்த சில வாரங்களாக பல இடங்களில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீரும், ஒருசில பகுதிகளில் 2 நாளைக்கு ஒருமுறை பொது குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு குழாய்களில் வரும் குடிநீரும் சுமார் அரைமணி நேரத்துக்குள் நிறுத்தப்படுகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இப்பகுதி மக்கள் குடிநீர் தேடி காலி குடங்களுடன் பல இடங்களில் சுற்றி அலைந்தனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும்,