இளையான்குடியில் மறியல் செய்தவர்கள் மீது வழக்கு

இளையான்குடி, மே 15:  இளையான்குடியில் சாலை மறியல் செய்த சிபிஎம் கட்சியினர் மீது இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இளையான்குடியில் கடந்த மே 10ம் தேதி, பனைக்குளத்தைச் சேர்ந்த விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் லெட்சுமணன், பெரிய வண்டாலையைச் சேர்ந்த விவசாயி காத்த முத்து மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களையும், அதற்கு காரணமானவர்களையும் கண்டு பிடித்து உரிய வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, மார்க்கிஸ்ட், விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொன்டு, இளையான்குடி கண்மாய்கரை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முன் அனுமதியின்றி சாலை மறியல் செய்த காரணத்திற்காக, விஏஓ துரைராசு கொடுத்த புகாரின் பேரில், சிபிஎம் கட்சியைச் சேர்ந்த சாமுவேல்ராஜா, தண்டியப்பன், திருநாவுக்கரசு, கந்தசாமி, வீரபாண்டி, ஆறுமுகம், அழகர்சாமி  உட்பட கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது இளையான்குடி போலீசார் வழக்குப்ப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: