குலசேகரம், மே 15: தனியார் வன பாதுகாப்பு சட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலத்தை விற்கவும், வாங்கவும், அதில் உள்ள மரங்களை வெட்டவும் அனுமதி கேட்டு குவிந்துள்ள மனுக்களை அரசு விரைந்து பரிசீலிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு கூட்டம் குலசேகரத்தில் நடந்தது. செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், ஸ்டாலின்தாஸ், அகமது உசேன், மாதவன், சேகர், உஷா பாசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.