ராசிபுரம், மே 15: ராசிபுரம் வாரச்சந்தையில் சாலையை வியாபாரிகள் ஆக்கிரமிப்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் ஸ்டாண்டு பகுதியில் செவ்வாய்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுகிறது. இங்கு, வாரச்சந்தைக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர்த்து வியாபாரிகள் சாலையோரங்களை ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளனர். நாளுக்குநாள் பஸ் ஸ்டாண்டு முகப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்களது டூவீலர்களை சாலையையொட்டி நிறுத்திவிட்டு செல்கின்றனர்.