குமாரபாளையம் அருகே கார் டயர் வெடித்து லாரியில்3

மோதியது; டிரைவர் பலிகுமாரபாளையம், மே 15: சாலையில் சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்ததில், எதிரே வந்த லாரியில் கார் மோதிய விபத்தில் டிரைவர் உடல் நசுங்கி பலியானார். கோவையை சேர்ந்தவர் தனபால்(46). இவர், எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். கம்பெனியின் உரிமையாளர் வெளிநாட்டு பயணம் முடிந்து விமானம் மூலம் பெங்களூர் வந்து, பிறகு கார் மூலம் கோவை திரும்ப திட்டமிட்டுள்ளார். இதற்காக நேற்று காலை தனபால் பெங்களூருக்கு காரை ஓட்டிச்சென்றார்.

குமாரபாளையம் அடுத்துள்ள அருவங்காடு என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக காரின் டயர் வெடித்தது. இதில், கார் நிலைதடுமாறி சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிரே வந்து கொண்டிருந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரின் முன்பகுதி முழுவதும் லாரியில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் கார் டிரைவர் தனபால் உடல் நசுங்கி இறந்தார். தொடர்ந்து தகவலறிந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: