ஜடா முனீஸ்வரர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை

சீர்காழி, மே 15: சீர்காழி தேர்வடம் போக்கி சந்தில் ஜடாமுனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 34 வது ஆண்டு விழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும், மத நல்லிணக்கம் வேண்டியும் சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவையொட்டி முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆனந்தராஜ், திரிசங்கு, பிரபாகரன், நாராயணன், கணேசன்குமார், உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Related Stories: