அருமனை, மே 14: அருமனை அருகே வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்தவர் விஸ்வாம்பரன். இவர் அப்பகுதியில் உள்ள இசக்கி அம்மன் கோயில் கமிட்டி தலைவராக உள்ளார். சம்பவத்தன்று விஸ்வாம்பரன் கோயிலில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார், அஜித் ஆகியோர் கோயில் வளாகத்தில் அத்துமீறி நுழைந்து விஸ்வாம்பரனை வெட்டுக்கத்தியால் தாக்க முயன்றுள்ளனர். இதில் இருந்து அதிர்ஷ்டவசமாக விஸ்வாம்பரன் உயிர் தப்பினார்.