திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கீதாஜீவன் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி,மே 14: ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி பகுதிகளில் திமுக வேட்பாளருடன் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வாக்கு சேகரித்தார். ஓட்டப்பிடாரம் தொகுதிக்குப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி 1,2,3 வார்டுகளில் உள்ள அம்பேத்கர்நகர், கேடிசிநகர், முத்தம்மாள்காலனி, சங்கரபேரி, பண்டாரம்பட்டி  உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் சண்முகையாவிற்காக வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையிலான திமுகவினர் வீதி வீதியாகவும், வீடு வீடாகவும் சென்று வாக்குகள் சேகரித்தனர்.

இதில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், பொறியாளர் அணி அன்பழகன், தொண்டரணி ரமேஷ், மாநகர இளைஞரணி ஆனந்தகேப்ரியேல்ராஜ், நகர செயலாளர் கருணாநிதி, மாநகர துணை செயலாளர் கனகராஜ், மாவட்ட மீணரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், ரவிந்திரன், ஜெயக்குமார், மீனவரணி டேனி, ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், முருகேசன், செல்வராஜ், காசிவிஸ்வநாதன், மாணவரணி துணை செயலாளர் பாலகுருசாமி, தொமுச பிரான்சிஸ், சண்முகம், தனசேகரன், முருகன், முத்துராஜ், நிர்வாகிகள் முத்துவேல், தொண்டரணி முருகஇசக்கி உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: