ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து பிரேமலதா இன்று பிரசாரம் செய்கிறார். ஜி.கே.வாசன் நாளையும், நடிகர் சரத்குமார் 16ம் தேதியும் பிரசாரம் செய்ய உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலருமான கடம்பூர் ராஜூ கூறியிருப்பதாவது: ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்கின்றனர். அதன்படி, இன்று (செவ்வாய்) மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி பாரதி நகரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து, மாலை 5.30 மணிக்கு ஓட்டப்பிடாரம், 6.30 மணிக்கு ஒட்டநத்தம், இரவு 7 மணிக்கு ஓணமாக்குளத்தில் பிரசாரம் செய்கிறார்.