சிவகாசி, மே 14: சிவகாசி அருகே திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகாசி அருகே திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் தினசரி 400 முதல் 600க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கிறார்கள். அரசு மருத்துமனையில் கூடுதல் டாக்டர் நியமிக்க வேண்டும், மின்சார வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், டாக்டர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வரவேண்டும்.