தேனி, மே 14: ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு மறு தேர்தல் நடத்த கோரி, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சுயேச்சை வேட்பாளர்கள் மனு அளித்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் கடந்த மாதம் 18ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் 16 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர்கள் வைகை பாண்டியன், பாலகிருஷ்ணன், அழகர்சாமி, கழுசிவலிங்கம், கண்டுக்காரன் ஆகியோர் மாவட்ட தேர்தல் அதிகாரி பல்லவி பல்தேவியை நேற்று நேரில் சந்தித்து தனித்தனியாக மனுக்கள் கொடுத்தனர்.