தேனி அருகே பி.சி.பட்டியில் கண்மாயை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

 

தேனி, மார்ச் 14: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள கன்னிமார்குளம் கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் போடி விலக்கு பகுதியில் கன்னிமார்குளம் கண்மாய் உள்ளது. பெரியாறு வைகை உபவடி நிலக்கோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கண்மாயில் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்போது, இக்கண்மாய் நிரம்புகிறது. இக்கண்மாய் நீரைக் கொண்டு முல்லைப்பெரியாறு அணை கடைமடை பகுதி விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இக்கண்மாயில் மீன்வளத்துறையின் சார்பில் மீன்வளர்ப்பும் நடந்து வந்தது. இந்நிலையில், தற்போது, இக்கண்மாய் இருக்கிற அடையாளமே தெரியாத அளவிற்கு கண்மாய் முழுவதும் ஆகாயத் தாமரை செடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் நீர்வாழ் மீனினங்கள் அழிந்து போகும் நிலை உள்ளது.

Related Stories: