காரைக்குடி, மே 14: வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் கோடைகாலத்தில் அவற்றை கூடுதல் அக்கறையோடு கவனிக்க வேண்டும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது: ‘கோடை காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு போதிய அளவு தண்ணீர், உணவு கொடுக்க வேண்டும். வெயிலில் அதிக நேரம் கட்டி வைக்க கூடாது. சற்று குளிமையான இடத்தில் அவற்றை உலா விட வேண்டும். நாய்களுக்கு 45வது நாளில் நோய் தடுப்பூசியும், 90வது நாளில் வெறிநாய் தடுப்பூசியும் போட வேண்டும்.