திருப்புத்தூர், மே 14: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர்-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் நின்ற லாரியில் டூவீலர் மோதியதில் நாதஸ்வர கலைஞர் பலியானார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள லால்குடி வெட்டிவயலைச் சேர்ந்தவர் கணேசன்(55). இவரது மகன் வெங்கடேசன்(27). இவர்கள் இருவரும் நாதஸ்வர கலைஞர்கள். இந்நிலையில், இவர்கள் இருவரும் திருப்புத்தூர் அருகே வடவன்பட்டியில் நடந்த கோயில் விழாவில் நாதஸ்வரம் வாசித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு டூவீலரில் ஊர் திரும்பியுள்ளனர். அப்போது, சிவகங்கை மாவட்டம், படமாத்தூர் அருகே சித்தாலங்குடியைச் சேர்ந்த கோடாங்கி மகன் குமார்(44) என்பவர் கமுதியில் இருந்து சென்னைக்கு டாரஸ் லாரியில் எம்சென்ட் மணல் ஏற்றிக்கொண்டுவந்துள்ளார். அப்போது திடீரென டீசல் டியூபில் பழுது ஏற்பட்டு வண்டி திருக்கோஷ்டியூர் அருகே நின்றுவிட்டது.