முத்துப்பேட்டை, மே 14: நாகை மாவட்டம் திருப்பூண்டி மீன் மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் ஹாஜா மைதீன்(41). இவர் முத்துப்பேட்டை மஜிதியா தெருவை சேர்ந்த பழ வியாபாரி ஜாஹீர் உசேன் மகள் பாருக் பானுவை திருமணம் செய்து கொண்டு இங்கேயே வசித்து வந்தார். மேலும் ஹாஜா மைதீன் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டையில் ஆட்டு இறைச்சி கடை நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் ஹாஜா மைதீன் சொந்த ஊரான திருப்பூண்டி சென்றுவிட்டு ஊருக்கு திரும்பினார். பின்னர் கடும் குடிபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கும், மனைவி பாருக் பானுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வீட்டை விட்டு சென்ற ஹாஜா மைதீன் பின்னர் வீடு திரும்பவில்லை.