திருச்சி, மே 10: கூட்டுறவு சங்க செயலாளரை மிரட்டிய ரேஷன் கடை ஊழியர் கைது செய்யப்பட்டார். திருச்சி மேலகல்கண்டார்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி பேபி (32). இவர் திருவளர்ச்சோலை முதன்மை வேளாண் கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக உள்ளார். துவாக்குடியை சேர்ந்த வின்சென்ட் உத்தமர்சீலி ரேஷன் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். வின்சென்ட் கணக்கு சரி பார்ப்பதற்காக திருவளர்ச்சோலை முதன்மை வேளாண் கூட்டுறவு சங்கத்துக்கு சென்றார்.