பட்டுக்கோட்டை, மே 10: பட்டுக்கோட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு மக்கள் பாதுகாப்பு பேரவை மனு அனுப்பியுள்ளது. தமிழக அரசுக்கு மக்கள் பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் கோரிக்கை மனு அனுப்பினார். அதில் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியூர், வெளிமாவட்டங்களுக்கும் கல்லூரிகளில் படிப்பதற்காக செல்கின்றனர்.