ஈரோடு, மே 10: ஈரோடு காவிரி ஆர்எஸ்.,க்கும் ஆனங்கூர் ஆர்எஸ்.,க்கும் இடைப்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் ரயில் மோதி இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. எஸ்எஸ்ஐ சுகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மூதாட்டியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எஸ்பிபி காலனியை சேர்ந்த கந்தசாமி மனைவி வீரம்மாள் (65) என தெரியவந்தது.