நாகர்கோவில், மே 10: வடசேரி வெள்ளாளர் சமுதாய மாசான சுடலை சுவாமி கோயில் திருவிழா இன்று(10ம் தேதி) நடக்கிறது. காலை 7 மணிக்கு வடசேரி வெள்ளாளர் சமுதாய சாஸ்தான் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. 9 மணிக்கு பழையாற்றில் இருந்து கட்டபுளியமூடு கோயிலுக்கு புனிதநீர் எடுத்து வருதல், 11 மணிக்கு மந்திரமூர்த்தி, தம்புராட்டி, சுடலைமாடன், பேச்சியம்மாள், ஈனபுலமாடன், புலமாடத்தி, சிவனணைந்த பெருமாள், குஞ்சுமாடன் ஆகிய மூலஸ்தான தெய்வங்களுக்கு களபம் சார்த்துதல் நடக்கிறது.