தாழையூத்து, மே 10: தாழையூத்து அருகில் தாமிரபரணியில் பழமையான நடராஜர் சிலை கிடைத்தது. தாழையூத்து அருகேயுள்ள ராஜவல்லிபுரம் கிராமம், செப்பறை தாமிரபரணி ஆற்றில் நேற்று முன்தினம் சுற்றுலா வந்த பயணிகள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது பாளை மணக்காடு கிராமத்தை சேர்ந்த அடைக்கலம் மகன் மகேஷ் என்பவரது கைகளில் சுவாமி சிலை கிடைத்துள்ளது. அது பழமையான நடராஜர் சிலை என்பது தெரிய வந்தது. இதனை மகேஷ் செப்பறை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.