பெண் கைதி மருத்துவமனையில் அனுமதி

வேலூர், மே 10: வேலூர் பெண்கள் தனிச்சிறையில் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட விசாரணை கைதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வேலூர் பெண்கள் தனிச்சிறையில் 350க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகளுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுகிறது. அப்போது கைதிகளுக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது. பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்புகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி சாராய வழக்கில் கைதாகி விசாரணை கைதியாக அடைக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரி(49) என்பவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவருக்கு சிறையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: