வேலூர், மே 10: வேலூர் பெண்கள் தனிச்சிறையில் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட விசாரணை கைதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வேலூர் பெண்கள் தனிச்சிறையில் 350க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகளுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுகிறது. அப்போது கைதிகளுக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது. பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்புகின்றனர்.