செங்கல்பட்டு: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக் கோட்டை சிப்காட் வளாகத்தில் தனியார் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கிவருகின்றது. இந்த தொழிற்சாலையில் போர்டு, நிசான், மாருதி, அசோக்லைலாண்ட், வேல்வோ, டைம்லர் உள்ளிட்ட பிரபல மோட்டார் வாகன தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் கார், லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்குத் தேவையான அனைத்து வித கண்ணாடிகளையும் தயாரித்து வருகின்றனர்.
இங்கு 239 நிரந்தர தொழிலாளர்கள், 1500க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்கள் பணிசெய்து வருகின்றனர். நிரந்த தொழிலாளர்கள் இணைந்து சிஐடியு சங்கத்தைத் துவக்கியுள்ளனர். தொழிற்சங்கம் வைத்ததற்காக 28 தொழிலாளர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது இந்நிலையில் 28 தொழிலாளர்கள் மீதான சட்ட விரோத வேலை நீக்கத்தை ரத்து செய்திட வேண்டும். தொழிலாளர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்.