திருப்போரூர் : திருப்போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, ரொக்கம் ரூ.10 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர். திருப்போரூர் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள புதுத்தெருவினைச் சேர்ந்தவர் சேகர் (59). இவரது வீட்டின் தரை தளம் மற்றும் முதல்தளத்தில் வாடகைக்கு குடியிருக்கின்றனர். இரண்டாம் தளத்தில் சேகர் குடும்பத்துடன் வசிக்கிறார். பைனான்சியரான சேகரின் மனைவி ரேணுகா மற்றும் குழந்தைகள் கோயம்புத்தூர் சென்று விட்டனர். சேகர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று காலை சுமார் 10 மணியளவில் உறவினர் ஒருவரின் இறப்பு சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேகர் வீட்டைப் பூட்டி விட்டு சென்றிருந்தார். பகல் 12 மணியளவில் திரும்பி வந்தபோது வீட்டின் பிரதான வாயிற் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.