மன்னார்குடி, மே 9: திருவாருர் மாவட்டம் கோட்டூர் அருகே சுமைதாங்கி கிராமத்தை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் விஜயகுமார் மகன் தீபன்ராஜ் (15). பள்ளிவர்த்தி மெயின் ரோடை சேர்ந்த ராகவன் மகன் கலையரசன் (15). காசாங்குளம் கிராமத்தை சேர்ந்த பாலு மகன் பிரவீன் (15). இவர்கள் மூவரும் இணைபிரியா நண்பர்கள். 3 பேரும் கோட்டூர் அருகே மழவராயநல்லூர் கிராமத்தில் உள்ள அரசினர் உயர் நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் மூன்று மாணவர்களும் நேற்று பள்ளிக்கு மாற்று சான்றிதழ் வாங்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு உறவினர் ஒருவரிடம் இரவலாக பைக் வாங்கி கொண்டு 3 பேரும் ஒரே பைக்கில் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து கோட்டூர் சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தனர்.