தஞ்சை, மே 9: பிளஸ்1 தேர்வு முடிவில் தஞ்சை மாவட்டம் 95.85 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தஞ்சை மாவட்டம் மாநில அளவில் 17வது இடத்தை பிடித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று பிளஸ் 1 தேர்வு முடிவுகளை முதன்மை கல்வி அலுவலர் சாந்தா வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் 223 பள்ளிகளில் இருந்து 12,098 மாணவர்கள், 15,288 மாணவிகள் என்று மொத்தம் 27,386 பேர் தேர்வெழுதினர். இதில் 11,378 மாணவர்கள், 14,872 மாணவிகள் என்று 26,250 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95.85 சதவீத தேர்ச்சியாகும். பிளஸ்1 தேர்வில் மாநில அளவில் தஞ்சை மாவட்டம் 17வது இடம் பெற்றுள்ளது.