கீழக்கரை, மே 9: ஏர்வாடி தர்ஹா அருகில் உள்ள சின்ன ஏர்வாடியில் கடந்த 15 நாட்களுக்கு முன் கடற்கரையில் வீசிய வேகமான பலத்த காற்றால் இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்து இப்பகுதியில் குடியிருக்கும் 20க்கும் மேற்பட்ட மினவர்கள் வீடுகளிலும், அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பெருமாள் கோயிலிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து தெரு விளக்குகளும் எரியாமல் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து மின்வாரியத்திற்கு பலமுறை நேரில் சென்றும், கைபேசி மூலமாகவும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குளாகி வருகின்றனர். கலெக்டர் நடவடிக்கை எடுக்க இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.