மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி, மே 9:  பொள்ளாச்சியை அடுத்த நெகமம் அருகே உள்ள செட்டியக்காபாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகவிழா கடந்த 6ம் தேதி காலை கணபதிஹோமத்துடன் துவங்கியது. அன்று இரவில் லட்சுமி ஹோமம் நடந்தது. நேற்று முன்தினம் மாலையில் விநாயகர் வழிபாடு, பின் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின் முதற்கால யாகபூஜை நடந்தது.  தொடர்ந்து நேற்று காலையில், இரண்டாம் கால யாக பூஜையும், நாடி சந்தானம், திரவியாகுபதி நடந்தது. சுமார் 9.30மணிக்கு கோபுர விமான கும்பாபிஷேகம், 10 மணியளவில் மாரியம்மன் மற்றும் விநாயகர், பாலமுருகன் மூலஸ்தான குமபாபிஷேகம் நடந்தது.

Related Stories: