கம்பம், மே 8: கம்பம் அருகே சுருளிஅருவியில் கொள்ளை நடந்தும் போலீசார் கண்காணிப்பு குறைவாகவே உள்ளது.தேனிமாவட்டத்தின் பிரசித்திபெற்ற புண்ணியதலமாக உள்ள சுருளிஅருவிக்கு அதிகமான அளவில் பக்தர்களும், வெளியூர் சுற்றுலாபயணிகளும் வருவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை தினம் என்பதால் மதுரை, திண்டுக்கல், இடுக்கி மாவட்டங்களில் இருந்து அதிகமான அளவில் சுற்றுலாபயணிகள் வருகின்றனர். தென்மேற்கு பருவமழை, கோடை மழை முறையாக பெய்யாத நிலையில் சுருளி அருவிக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் சுற்றுலா வருபவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருந்தாலும் சுற்றுலாபயணிகள் மிக ஆர்வமாக சுருளி அருவிக்கு வருகின்றனர். அதேநேரத்தில் சுற்றுலாபயணிகளிடம் ரூ.5 கட்டணத்தை வசூல் செய்வதில் வனத்துறையினர் மிக தீவிரமாக இறங்கி உள்ளனர்.