திருச்சி, மே 8: திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம்தங்கவேல் பிள்ளைஸ்டோரை சேர்ந்தவர் ஈஸ்வர். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி உஷா. இவர் மகளுடன் முக்கொம்பு பகுதியில் கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டார். ஈஸ்வர் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். மேலும் குடிப்பழக்கம் உடையவர். இவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படும். அதற்கு மாத்திரை சாப்பிட்டு வருகிறார். வேலைக்கு சென்றுவிட்டு வரும் ஈஸ்வர் குடித்துவிட்டு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் ஆட்டோ ஓட்டிவிட்டு வந்த ஈஸ்வர் வீட்டில் படுத்து தூங்கினார்.