ஆசியன் கராத்தே போட்டியில் தமிழக மாணவர்கள் பதக்கங்கள் குவிப்பு திருச்சி ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு

ஏர்போர்ட், மே 8:  மலேசியாவில் நடைபெற்ற ஒக்கினவா கோஜிரியோ  கராத்தே போட்டியில் இந்தியாவிலிருந்து  250 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.  இதில்  9, 13, 14  வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் திருச்சி, சென்னை,  விழுப்புரத்தை சேர்ந்த 11 மாணவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள்  வென்றனர்.  சென்னை தஷ்னிக்  தங்கம் வென்றார். இலக்கியா தங்கம், வெள்ளி  பதக்கமும், சீனிவாசன் வெள்ளி, திருச்சி ஆரியாஸ் பெவின் ஒரு வெள்ளி, ஒரு  வெண்கலம், மகதிசாய் 2 வெண்கலம், தினேஷ் கார்த்தி 2  வெண்கலம், சுபிக்ஷா,  அர்ச்சனா, ஹேமசந்திரன், குரு ஆகியோர் வெண்கலம் வென்றனர்.   இவர்கள் அனைவரும் விமானம் மூலம் நேற்று திருச்சி வந்தனர்.  அவர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில்  உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

Related Stories: