பாபநாசம், மே 8: பாபநாசத்தில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டம் நடந்தது. கிளை தலைவர் சுப்பு.தங்கராசன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் துரைசாமி வரவேற்றார். பொருளாளர் சண்முகம் வரவு, செலவு கணக்குகளை வாசித்தார். கூட்டத்தில் 2019 ஜனவரி முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலை நிர்ணயத்தை உடன் வழங்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.