திருச்செங்கோடு, மே 8: திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரியில், இளம் மாணவ விஞ்ஞானிகளுக்கான பயிலரங்கு நடந்தது.
திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரியில், இளம் மாணவ விஞ்ஞானிகளுக்கான பயிலரங்கு 3ம் தேதி தொடங்கியது. இப்பயிலரங்கு 17ம் தேதி வரை நடைபெறும். செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை ஆகியவை இணைந்து இதனை நடத்துகின்றன. அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான, இந்த பயிலரங்கில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை.