சித்திரை விழாவையொட்டி நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் ரத்து

நாமகிரிப்பேட்டை, மே 8:  சித்திரை விழாவையொட்டி, நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாமகிரிப்பேட்டையில் சித்திரை தேர்த்திருவிழா நடந்து வருகிறது. இன்று மாரியம்மன் கோயில் தீ மிதிவிழா மற்றும் தேர்திருவிழா நடக்கிறது. இதையொட்டி, நேற்று நாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ்.ல் நடக்க இருந்த மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது. அடுத்த வாரம் 14ம் தேதி வழக்கம் போல் மஞ்சள் ஏலம் நடக்கும் என ஆர்.சி.எம்.எஸ்., அறிவித்துள்ளது.

Related Stories: