நாகர்கோவில், மே 8: குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் மரிய செல்வம் (56). மீனவர். இவர் இலவச சட்ட உதவி மையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது : நான் மீன்பிடி தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர், என்னிடம் வியாபாரத்துக்காக மீன் வாங்க வரும் வகையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் பழக்கமானார். அவரது சகோதரியும் எனக்கு தெரியும். தொழில் ரீதியாக எங்களிடையே பணம், கொடுக்கல் வாங்கல் இருந்தது. இருவருமே மாறி, மாறி பணம் கொடுத்து உதவி செய்து வந்தோம். இந்த நிலையில் கடந்த 2018ல் தொழில் ரீதியாக எனக்கு ரூ.3 லட்சம் தேவைப்பட்டது. இது தொடர்பாக அந்த பெண்ணிடம் கேட்ட போது ரூ.10 வட்டிக்கு, ரூ. 1 லட்சம் தருவதாக கூறினார். வெற்று பத்திரத்தில் கையொப்பம் போட்டு தந்தால் தான் பணம் தர முடியும் என தெரிவித்தார். நானும் சம்மதம் தெரிவித்ததன் பேரில் பணம் பெற்றுக் கொண்டேன். அந்த பணத்துக்கு 28.2.2019 வரை ரூ.94 ஆயிரம் கட்டி உள்ளேன். இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் டி.எஸ்.பி.யாக இருந்த ஒருவரை எனக்கு அந்த பெண் அறிமுகம் செய்து வைத்தார். அந்த டி.எஸ்.பி. நாகர்கோவில் செட்டிக்குளத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி, குமரி மாவட்டத்தில் பணியில் இருந்து வந்தார். இப்போது அவர் வெளி மாவட்டத்தில் பணியில் இருக்கிறார். அவர் மூலம் ரூ.2 லட்சம் கடனாக எனக்கு வாங்கி தந்தார். இதற்காக வெற்று பத்திரம், வங்கி காசோலை உள்ளிட்டவற்றை பெற்றுக் ெகாண்டார். இந்த கடன் தொகைக்கு வட்டியாக மாதம் ரூ.20 ஆயிரம் வீதம் கடந்த பிப்ரவரி மாதம் வரை ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் கட்டி உள்ளேன்.