நாமக்கல், மே 7: வீட்டுமனைகளை அபகரிக்க மிரட்டும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று, வையப்பமலை மலைக்காவல் அம்மன் கோயில் தெருவை சேர்ந்த கண்பார்வையற்ற மாற்றுதிறனாளி பொன்னுசாமி(55), தனது மனைவி மாரியாயியுடன் மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர்.