தா.பேட்டையில் போர்வெல் மோட்டார் பயன்பாட்டிற்கு வந்தது

தா.பேட்டை, மே 7: தா.பேட்டையில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட போர்வெல் மோட்டார் மின் இணைப்பு கொடுக்காததால் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது தினகரன் செய்தி எதிரொலி காரணமாக போர் மோட்டார் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தா.பேட்டை பிள்ளாதுறை மகாமுனி கோவில் அருகே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போர்வெல் மற்றும் மோட்டார் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டது.

பல நாட்களாகியும் மின் இணைப்பு கொடுக்காததால் போர்வெல்லில் இருந்து தண்ணீர் எடுத்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய முடியாத நிலை இருந்தது. இது தொடர்பாக தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி சில தினங்களுக்கு முன் வெளியானது. இதையடுத்து மின்வாரிய துறையினரும், பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து செயல்பட்டு போர்வெல் அருகே புதிதாக கம்பம் அமைத்து மின் இணைப்பு கொடுத்து போர்வெல் மோட்டாரை இயக்கி பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்துள்ளது.

மேலும் போர்வெல் அருகே உள்ள மினி டேங்கில் தண்ணீர் ஏற்றி வைப்பதால் அப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கும், இடுகாட்டுக்கு காரியத்திற்கு வருபவர்களுக்கும் மிகுந்த உதவியாக இருப்பதாக கூறினர். செய்தி வெளியிட்ட தினகரனுக்கு அப்பகுதி மக்கள் தங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: