100 சதவீதம் தேர்ச்சிதிருச்சி, மே 7: பிளஸ்2 தேர்வில் திருச்சி ஒய்.டபுள்யூ.சி.ஏ மேல்நிலைப்பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. ஒய்.டபுள்யூ.சி.ஏ நிர்வாகத்தின்கீழ் செயல்படும் திருச்சி தில்லைநகரில் உள்ள ஒய்.டபிள்யு.சி.ஏ மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து பிளஸ்2 வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மற்றும் 10ம் வகுப்பில் 98 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அனைத்து மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிச்சாண்டார்கோவிலில் உள்ள ஒய்.டபிள்யூ.சி.ஏ பள்ளியில் 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதுடன் அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.