திருமங்கலம், மே 3: திருமங்கலம் கரடிக்கல்லில் மே 5ம் தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதையொட்டி இன்று மாடுகளுக்கும், நாளை மாடுபிடி வீரர்களுக்கும் பதிவுகள் நடைபெறவுள்ளது. திருமங்கலத்தை அடுத்துள்ள கரடிக்கல்லில் உள்ள சுந்தரராஜபெருமாள் கோயில் திருக்கல்யாணத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி நாளை மறுநாள் 5ம் தேதி நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு துவங்கி மாலை வரையில் போட்டி நடக்கும். தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஒன்றான இப்போட்டியில் பங்குபெறும் காளைகளின் பதிவு இன்றும்,