வருசநாடு, மே 1: கடமலைக்குண்டு பத்திர பதிவு அலுவலகத்திற்கு தாமதமாக அதிகாரி வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கடமலை-மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட கடமலைக்குண்டு கிராமத்தில் பத்திரபதிவு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு கடந்த சில தினங்களாகவே அங்கு பணியாற்றி வரும் அதிகாரிகள் தாமதமாக வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தினமும் காலை 11 மணி அல்லது 12 மணிக்கு அதிகாரிகள் வேலைக்கு வருவதாகவும், இதனால் தங்களின் வேலைச்சுமை அதிகரித்து வருகிறது எனவும் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் இருந்தும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வியாபாரிகள் கடமலைக்குண்டு பத்திர பதிவு அலுவலகம் வருகின்றனர்.