திருப்பூர், ஏப்.30:திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பாறைக்குழிகளில் குளிக்க செல்லும் மாணவர்கள், போதை வாலிபர்கள் மூழ்கி இறப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பாறைக்குழிகளை மூட வேண்டும் மக்கள் விழிப்புணர்வு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் 8 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்க்கின்றனர். இங்கு வசதியானவர்கள் கோடை விடுமுறையை கழிக்க பல்வேறு சுற்றுலாதலங்களுக்கு செல்கின்றனர், ஏழை, எளிய பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுமுறை நாட்களில் பாறைக்குழிகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கல்லாங்காடு,ரேவதி நகர், வெள்ளியங்காடு, கரைப்புதுார், அருள்புரம், பிச்சம்பாளையம், ஓடக்காடு, திருக்குமரன் நகர் மற்றும் ஊத்துக்குளி, பெருமாநல்லுார், திருமுருகன்பூண்டி, மங்கலம் உட்பட 20 க்கு மேற்பட்ட இடங்களில் பாறைக்குழிகள் உள்ளன. இவற்றில் மழை நீர் மாதக்கணக்கில் தேங்கி நிற்கிறது. இவற்றில் விடுமுறை நாட்களில் மாணவர்கள் குளித்து மகிழ்கின்றனர்.ஒரு சிலர் நீச்சல் பழகுகின்றனர். பாறைக்குழிகளுக்கு செல்வோர் பெரும்பாலும் நீச்சல் தெரியாதவர்களே அதிகளவு செல்கின்றனர். பாறைக்குழியின் ஆழம் மற்றும் சேறும் சகதியுமாக இருப்பது யாருக்கும் தெரியாததால் ஒரு சிலர் தண்ணீரில் மூழ்கி இறக்கின்றனர். கடந்த 3 மாதங்களில் 20க்கு மேற்பட்டோர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். தற்கொலை செய்வோரும் பாறைக்குழிகளில் விழுந்து இறக்கின்றனர். இது குறித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தில் செயலாளர் தமிழ்மணி கூறியதாவது.