இடைப்பாடியில் மாணவியை ஈவ்டீசிங் செய்த வாலிபர் கைது

இடைப்பாடி, ஏப்.30: இடைப்பாடியில் மாணவியை ஈவ்டீசிங் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். இடைப்பாடி அருகே மெய்யம்பாளையத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி வள்ளி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). இவர்களது 17 வயது மகள், பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி, நேற்று கல்லூரில் சேர விண்ணப்பம் வாங்க இடைப்பாடி பஸ் ஸ்டாண்டிற்கு தனது தயாருடன் வந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் விஜயகுமார்(23) என்பவர், பஸ்சில் ஏற முயன்ற மாணவியை கை பிடித்து இழுத்து திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி. ஈவ்டீசிங்கில் ஈடுபட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர், இடைப்பாடி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் விசாரணை நடத்தி, வாலிபர் விஜயகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.

Related Stories: