பள்ளி ஆண்டு விழா

திருப்பரங்குன்றம்,ஏப்.25: திருப்பரங்குன்றத்தில் உள்ள மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 15 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பள்ளியின் முதல்வர் ஜெரால்டு ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.  இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டரும், வித்யாலயா மேலாண்மை குழுவின் தலைவருமான மு.நடராஜன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories: