செம்பட்டி, ஏப். 25: ஆத்தூரில் காட்சிப்பொருளாக உள்ள தண்ணீர் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செம்பட்டி அருகே ஆத்தூரில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பல தொட்டிகள் காட்சிப்பொருளாய் உடைந்துள்ளன. மேலும் ஆழ்துளை கிணறு மின்மோட்டார்கள் மாயமாய் மறைந்துள்ளன. குறிப்பாக ஆத்தூர் நுழைவுப்பகுதி, ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி உள்பட பல இடங்களில் தண்ணீர் தொட்டிகள் காட்சிப்பொருளாய் உள்ளன. தவிர அக்ரஹாரம் மேற்கு பகுதியில் உள்ள தொட்டி உள்பட பல இடங்களில் திருகு குழாய்கள் இல்லாததால் தண்ணீர் வீணாகி கழிவுநீரில் கலக்கின்றன.