கஞ்சா விற்ற இரு பெண் உள்பட மூவர் கைது

சத்தியமங்கலம், ஏப்.25: புஞ்சைபுளியம்பட்டி அருகே சொலவனூர் மேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி சம்பவ இடத்திற்கு சென்ற புஞ்சைபுளியம்பட்டி போலீசார் அப்பகுதியில் உள்ள முட்புதரில் கஞ்சா விற்ற 4 பேரை பிடிக்க முயன்றபோது ராதா என்ற பெண் மட்டும் சிக்கினார். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் சொலவனூர் மேட்டை சேர்ந்த மருதாள் (50), ராணி (48), ராஜா (34) ஆகிய மூவர் தலைமறைவாகினர். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் பனையம்பள்ளி பஸ்ஸ்டாப் அருகே நின்றுகொண்டிருந்த மருதாள், ராணி, ராஜா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: