தூத்துக்குடி மாவட்ட கிளை சிறைகளில் துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தூத்துக்குடி, ஏப்.25: பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாளையங்கோட்டை மத்தியசிறை கட்டுப்பாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டம், பேரூரணி மாவட்ட சிறை, கோவில்பட்டி, திருச்செந்தூர் மற்றும் வைகுண்டம் பகுதிகளில் உள்ள கிளைச் சிறைகளில் காலியாக உள்ள தலா ஒரு துப்புரவு பணியாளர் பணியிடம் என மொத்தம் 4 முன்னுரிமை அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இதர வகுப்பினர் 18 முதல் 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 18 முதல் 32 வயதுக்குள்ளும், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் 18 முதல் 35 வயதுக்குள்ளும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். தகுதியான நபர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டிய விண்ணப்பத்துடன் சாதிச்சான்று நகல், ஆதார் அட்டை நகல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பின் அதன் விவரங்களுடன் மே 17ம் தேதிக்குள் கண்காணிப்பாளர் அலுவலகம், மத்தியசிறை, பாளையங்கோட்டை- என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: