கோவில்பட்டி கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கல்

கோவில்பட்டி, ஏப்.25: கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமிநாடார் மாரியம்மாள் கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் 75 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமிநாடார் மாரியம்மாள் கல்லூரியில் வேலைவாய்ப்பு வழிகாட்டி மையம் சார்பில் சென்னை ப்ளூஓசன் பெர்சனல் அலைடு சர்வீஸ் நிறுனத்தின் மூலம் வளாக தேர்வை நடந்தது. இதில் இக்கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 110 பேர் கலந்து கொண்டனர்.  75 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான பணி நியமன ஆணையை கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமையில் சென்னை ப்ளூஓசன் பெர்சனல் அலைடு சர்வீஸ் நிறுனத்தின் மூலம் இந்நிறுவன மனிதவள மேலாளர் ராம்கி வழங்கினார். மாணவர்களை கல்லூரி செயலாளர் கண்ணன், பொருளாளர் மகேஷ், கல்லூரி முதல்வர் சுரேஷ், கல்லூரி கமிட்டி உறுப்பினர்கள் பாராட்டினார். ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு மைய அலுவலர்கள் கற்குவேல்ராஜ், விஜயகோபாலன், செல்வலட்சுமி செய்திருந்தனர்.

Related Stories: