மன்னார்குடி, ஏப்.25: திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை சிவன் கோயில் பகுதியை சேர்ந்தவர் சுந்தராம்பாள் (65). இவரின் கணவர் கல்யாணசுந்தரம் தற்போது உயிரோடு இல்லை. இவர்களுக்கு பக்கிரிசாமி உள்ளிட்ட 3 மகன்கள் உள்ளனர். மூவருக்கும் திருமணம் ஆகி அப்பகுதியில் அருகருகில் வசித்து வருகின்றனர். சுந்தராம்பாள் தனது மகன்கள் வீட்டில் மாறி மாறி தங்கி யிருந்தார். கடைசியாக தனது மூத்த மகன் பக்கிரிசாமி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20 ம் தேதி பக்கிரிசாமி தனது தாயார் சுந்தராம்பாளை வீட்டில் தங்க வைத்து விட்டு உறவினர் வீட்டில் நடைபெற்ற விசேசத்திற்கு தனது குடும்பத்தினருடன் சென்று விட்டார். வயது முதிர்வு காரணமாக சுந்தராம்பாள் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை என கூறப்படுகிறது. இதனால் தனிமையில் இருந்த அவர் உறவினர் வீட்டில் நடைபெற்ற விசேசத்திற்கு செல்ல முடியாத ஏக்கத்தில் அருகில் இருந்த கடைக்கு சென்று எலி பேஸ்டை வாங்கி தின்றுள்ளார்.